கிரவுட்ஃபண்டிங் முதலீட்டு மோசடி

நவீன கால ஏமாற்று முறை: "ஒரு ஸ்டார்ட்அப்-ஐ ஆதரிப்பது" மற்றும் "ஒரு சமூக நோக்கத்தை ஆதரிப்பது" ஒரு மோசடியை ஆதரிப்பதை போன்றதாகும்

போலியான கிரவுட்ஃபண்டிங் முதலீட்டு தளங்களினால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்

நவீன கால ஏமாற்று முறை: "ஒரு ஸ்டார்ட்அப்-ஐ ஆதரிப்பது" மற்றும் "ஒரு சமூக நோக்கத்தை ஆதரிப்பது" ஒரு மோசடியை ஆதரிப்பதை போன்றதாகும்

போலியான கிரவுட்ஃபண்டிங் முதலீட்டு தளங்களினால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்

இது பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான அழைப்பு அல்லது ஒரு பிரபலமான யோசனையுடன் தொடங்குகிறது.

இந்தியாவின் அடுத்த யுனிகார்ன் என்று“கூறும் ஒரு நவீன கால ஸ்டார்ட்அப்.”
ஒரு சோசியல் நிறுவனம் இவ்வாறு கூறுகிறது“உங்களின் சிறுதுளி நன்கொடை ஒருவரின் வாழ்க்கையை மாற்றுகிறது.”
ஒரு நேர்த்தியான கிரவுட்ஃபண்டிங் பக்கம் உறுதியளிக்கிறதுசிறு முதலீட்டாளர்களுக்கான ஈக்விட்டிமற்றும்“ஃபண்டிங் நிறுத்தப்பட்ட பிறகு 10 மடங்கு வருமானங்கள்.”

அனைத்தும் உண்மையானதாகத் தோற்றமளிக்கும் - லோகோ, டெஸ்டிமோனியல்ஸ், நிறுவனர்களின் புகைப்படங்கள் கூட.
நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்கிறீர்கள், அதோடு நீங்கள் புதுமை அல்லது தாக்கத்தை ஆதரிக்கிறீர்கள் என்று நம்புதல்.

ஒரு வாரங்களுக்குப் பிறகு, இணையதளம் காணாமல் போய்விடும், போன் எண்கள் வேலை செய்வதை நிறுத்திவிடும் - உங்கள் நம்பிக்கையும் அப்படியே போய்விடும்.

நீங்கள் ஒரு போலியான கிரவுட்ஃபண்டிங் முதலீட்டு தளத்தால் மோசடி செய்யப்பட்டிருக்கிறீர்கள்.

கிரவுட்ஃபண்டிங் முதலீட்டு மோசடி என்றால் என்ன?

கிரவுட்ஃபண்டிங் என்பது தனிநபர்கள் பிசினஸ் வென்ச்சர்கள், ஸ்டார்ட்அப்கள் அல்லது சமூக காரணங்களுக்காக ஆன்லைனில் பணம் திரட்ட அனுமதிக்கிறது. உண்மையான கிரவுட்ஃபண்டிங் ஆனது ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்க முடியும் என்றாலும், மோசடி செய்பவர்கள் முதலீட்டாளர்களையும் நன்கொடையாளர்களையும் ஏமாற்ற அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இது எப்படி செயல்படுகிறது என்பதை இங்கே பாருங்கள்:

  • அவர்கள் போலி இணையதளங்கள் அல்லது சமூக ஊடக பக்கங்களை உருவாக்குகிறார்கள், தொண்டு காரணங்களுக்கான ஸ்டார்ட்அப்களாக இருக்கின்றனர்.

  • அவர்கள் அதிக ஈக்விட்டி வருமானம், ஐபிஓ-களுக்கான ஆரம்ப அணுகல் அல்லது லாபப் பகிர்வு ஆகியவற்றை உறுதியளிக்கிறார்கள்.

  • அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து சிறிய தொகைகளை சேகரிக்கின்றனர் - தனித்தனியாக கவனிக்க எளிதானது ஆனால் மொத்தத்தில் குறிப்பிடத்தக்கது.

  • போதுமான பணம் திரட்டப்பட்டவுடன் அவை காணாமல் போகின்றன.

பெரும்பாலும், இந்த மோசடி செய்பவர்கள் நம்பிக்கையைப் பெற உணர்ச்சி மற்றும் அவசரத்தை பயன்படுத்துகிறார்கள் - ஸ்டார்ட்அப் ஆர்வத்தை சமூக காரணங்களின் இதயத் துடிப்புகளுடன் இணைத்தல்.

ஆபத்தான போக்கு

சைபர் கிரைம் அறிக்கைகளின்படி, சமூக ஊடகங்கள், டெலிகிராம் குழுக்கள் மற்றும் வாட்ஸ்அப் சேனல்களில் போலியான கிரவுட்ஃபண்டிங் செய்யும் சோசியல் கேம்பைன்களால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பணத்தை இழந்துள்ளனர்.

https://www.indiatvnews.com/uttar-pradesh/crowdfunding-scam-up-ats-arrests-three-from-maharashtra-for-misusing-gaza-relief-funds-latest-updates-2025-09-22-1009405

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், பல பங்கு சார்ந்த ஸ்டார்ட்அப் மோசடிகளும் அவ்வப்போது நிகழ்கின்றன. மிகவும் பொதுவான பாதிக்கப்பட்டவர்கள்? சிறிய ரீடெய்ல் முதலீட்டாளர்கள் - ₹ 5,000 - ₹ 50,000 பங்களிப்பு செய்பவர்கள் எனத் தோன்றுகிறது, "ஒரு நல்ல யோசனைக்கு உதவுவதில் என்ன தீங்கு?"

இந்த மோசடிகள் உங்களை எவ்வாறு ஈர்க்கின்றன

  • உணர்ச்சிபூர்வமான கதைசொல்லுதல்: "நிலைத்தன்மைக்காக போராடும் ஒரு பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப் நாங்கள்."

  • போலியான "முதலீட்டாளர் தகவல்களை" காட்டும் தொழில்முறை தோற்றமுடைய இணையதளங்கள் மற்றும் டேஷ்போர்டுகள்

  • "இஎஸ்ஜி", "இம்பாக்ட் இன்வெஸ்டிங்", "ப்ரீ-சீட் ரவுண்ட்", "ஏஞ்சல் பார்டிசிபேஷன்", போன்ற முக்கியச் சொற்களின் பயன்பாடு.

  • முன்-ஐபிஓ அல்லது ஆரம்ப கட்ட ஈக்விட்டிக்கு "பிரத்யேக அணுகலை" கோரும் மெசேஜ்கள்.

  • பதிவுசெய்யப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு பதிலாக தனிநபர் கணக்குகள் அல்லது வாலெட்களில் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான கோரிக்கைகள்.

கிரவுட்ஃபண்டிங் மோசடிகளிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாப்பது

  1. கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (எம்சிஏ) இணையதளத்தில் நிறுவனத்தின் பதிவு விவரங்களை சரிபார்க்கவும்.

  2. பணம் எதற்காக திரட்டப்படுகிறது என்கிற சமூக காரணங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும். இது பணமோசடிக்கு ஒரு முன்னோடியாகவும் இருக்கலாம்.

  3. சிறிய-டிக்கெட் "ஈக்விட்டி" வாக்குறுதிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் - உண்மையான ஈக்விட்டி முதலீடு எப்போதும் உரிமம் பெற்ற தளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட புரோக்கர்கள் மூலம் செய்யப்படுகிறது.

  4. உத்தரவாதமான வருமானங்களை வழங்கும் பிரச்சாரங்களை தவிர்க்கவும் - சட்டபூர்வமான ஸ்டார்ட்அப்கள் அதை செய்யவில்லை.

  5. தனிநபர் கணக்குகளுக்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டாம் அல்லது ஒரு தொழிலை பிரதிநிதித்துவப்படுத்த கோரும் தனிநபர்களின் யுபிஐ ஐடி-கள்.

  6. வெளிப்படைத்தன்மையை தேடுங்கள் - உண்மையான ஸ்டார்ட்அப்கள் சரிபார்க்கக்கூடிய தொடர்பு விவரங்கள், நிறுவனர்களின் இணைக்கப்பட்ட சுயவிவரங்கள் மற்றும் தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்களை பகிர்கின்றன.

  7. சந்தேகத்திற்கிடமான தளங்களைப் புகாரளிக்கவும் அல்லது செபி அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் முறையிடவும்.

இறுதி வார்த்தை: அனுதாபம் நல்லது. சரிபார்ப்பு சிறந்தது.

புதுமை மற்றும் தொழில்முனைவோரை ஆதரிப்பது அற்புதமானது - ஆனால் உங்கள் பாதுகாப்பின் செலவில் இல்லை.
மோசடி செய்பவர்கள் பேராசை மற்றும் வஞ்சகத்தை நல்லெண்ணம் மற்றும் சமூக முன்னேற்றத்தின் மொழியில் சுற்றி வளைப்பது அதிகரித்து வருகிறது.

ஒரு Atmanirbhar முதலீட்டாளராகுங்கள் - ஒரு அறிமுகமில்லாத தளத்தில் அடுத்த "பெரிய யோசனையில்" முதலீடு செய்வதற்கு முன், நிதானித்து. யோசித்து, சரிபார்த்து செயல்படுங்கள்.

ஏனென்றால் ஒரு உண்மையான ஸ்டார்ட்அப் நம்பிக்கையை உருவாக்குகிறது - ஏமாற்றும் முறையை அல்ல.